/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு சம்பவத்தில்இருவர் மாயம்
/
வெவ்வேறு சம்பவத்தில்இருவர் மாயம்
ADDED : ஏப் 05, 2025 01:41 AM
வெவ்வேறு சம்பவத்தில்இருவர் மாயம்
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். தேர்வு முடிந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்த மாணவி, கடந்த, 2 இரவு, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றார். அவர் திரும்பி வராததால், அவரது தாய் கொடுத்த புகார்படி, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
* ஓசூர் கே.வி.எஸ்., நகரை சேர்ந்தவர் ராஜா, 54. கடந்த மாதம், 4 காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மனைவி சசிரேகா, 48, நேற்று முன்தினம் கொடுத்த புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.