ADDED : ஏப் 06, 2025 01:02 AM
அ நிறம் | அளவு
கூலி தொழிலாளி மாயம்
கிருஷ்ணகிரி:பர்கூர் அடுத்த எமக்கல்நத்தத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 49, கூலித்தொழிலாளி. இவர், தன் மனைவியுடன் கடந்த மாதம் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபித்து கொண்டு எமக்கல்நத்தம் வந்துள்ளார். வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். வெங்கடேசன் தாய் புகார் படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
