sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கி.கிரி நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு குடும்பத்துடன் மக்கள் கொண்டாட்டம்

/

கி.கிரி நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு குடும்பத்துடன் மக்கள் கொண்டாட்டம்

கி.கிரி நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு குடும்பத்துடன் மக்கள் கொண்டாட்டம்

கி.கிரி நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு குடும்பத்துடன் மக்கள் கொண்டாட்டம்


ADDED : ஆக 04, 2024 01:19 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, ஆடிப்பெருக்கையொட்டி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலுள்ள செல்லியம்மன் கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோவில் மற்றும் அணையிலுள்ள மார்கண்டேய சுவாமி கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜை, அணையில் சுவாமி வீதி உலாவும் நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலுள்ள செல்லியம்மன் சுவாமி சிலை முன் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது.

தென்பெண்ணை ஆற்றில் குளிக்க ஏதுவாக, கிருஷ்ணகிரி அணையிலிருந்து நேற்று முன்தினம் மாலை முதல், 505 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆடிபெருக்கையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர்.

* நேற்று ஆடிபெருக்கு நாளில் பேரூஹள்ளி, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் குளம் போல் தேங்கியுள்ள நீரில் பக்தர்கள் புனித நீராடினர். அதேபோல் அனுமன் தீர்த்தம், நீப்பத்துறை உள்ளிட்ட பகுதிகளில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருந்ததால், பக்தர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கியும், சின்டெக்ஸ் டேங்க்கில் உள்ள தண்ணீரில் குளித்தும் தங்களது காணிக்கையை செலுத்தினர்.

* அனுமன்தீர்த்தம் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அருகில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதிலிருந்து பக்தர்கள் ஒருவருக்கு தலா, 5 ரூபாய் கொடுத்து குளித்தனர்.






      Dinamalar
      Follow us