/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கன்டெய்னர் லாரியில் தீ விபத்து ரூ.5 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் நாசம்
/
கன்டெய்னர் லாரியில் தீ விபத்து ரூ.5 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் நாசம்
கன்டெய்னர் லாரியில் தீ விபத்து ரூ.5 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் நாசம்
கன்டெய்னர் லாரியில் தீ விபத்து ரூ.5 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் நாசம்
ADDED : ஆக 22, 2024 01:20 AM
கன்டெய்னர் லாரியில் தீ விபத்து
ரூ.5 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் நாசம்
ஓசூர், ஆக. 22-
சூளகிரி அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு, ஐதராபாத்தில் இருந்து, 500 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. தேனி மாவட்டத்தை சேர்ந்த முத்து, 31, என்பவர் லாரியை ஓட்டினார். சூளகிரி அருகே சப்படி தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று மதியம், 3:00 மணிக்கு லாரியை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். அப்போது, லாரி கேபினில் தீப்பிடித்து, லாரியில் பரவியது.
ஓசூர் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைக்க போராடியும், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 500க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் லாரி தீயில் கருகி நாசமானது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.