sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 06, 2024 01:32 AM

Google News

ADDED : ஆக 06, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி பெரும்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் மதியழகன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் சீனிவாசன் பேசுகையில், ''தமிழக அரசு, 40 ஆண்டுகளுக்கு மேல் சத்துணவுத்துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த, 7 ஆண்டு காலமாக ஊதியத்தை உயர்த்தவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஆக., 15 சுதந்திர தினவிழாவில், சத்துணவு ஊழியர்களுக்கு, 500, 600, 700 ரூபாய் என ஓய்வூதியம் அறிவித்தார். எனவே, தமிழக முதல்வர், வரும் சுதந்திர விழாவில், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு, ஓய்வூதியம், 6,750 ரூபாய் மற்றும் அதற்குண்டான அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்,'' என்றார்.

சங்க, மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us