ADDED : ஆக 24, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அச்செட்டிப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சூதாளம் கிராமத்தில் ரேஷன் கடை இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, கனிமங்களும், குவாரிகளும் திட்ட நிதியில் இருந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்நோக்கு மையம் கட்டப்பட்டுள்ளது. இதை ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க., ஒன்றிய செயலர் கஜேந்திரமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் அனிதா முனிராஜ், ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேஷ், பஞ்., தலைவர் சீனிவாசரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

