ADDED : ஆக 27, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோட்டில் உள்ள ரங்கநாதர் திருமண மண்டபத்தில், கவிஞர் உதயசூரியன் எழுதிய, 'சொன்னா நம்ப மாட்டீங்க' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்-தது.
தமிழியக்கம் சேலம் மண்டல செயலாளர் முல்லையரசு தலைமை வகித்தார். தர்மபுரி தி.மு.க., மேற்கு மாவட்ட செய-லாளர் பழனியப்பன் நுாலை வெளியிட, முன்னாள் எம்.பி., மருத்துவர் செந்தில் பெற்றுக் கொண்டார். இதில், தர்மபுரி மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்ற தலைவர் மலர்வண்ணன், தகடூர் புத்தக பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தங்கமணி, தமிழி-யக்கம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

