ADDED : செப் 17, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி, செப். 17-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறை தீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், பொதுமக்களிடம் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 211 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.