/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.3.05 கோடியில் கால்நடை மருத்துவமனை காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
/
ரூ.3.05 கோடியில் கால்நடை மருத்துவமனை காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
ரூ.3.05 கோடியில் கால்நடை மருத்துவமனை காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
ரூ.3.05 கோடியில் கால்நடை மருத்துவமனை காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
ADDED : ஆக 21, 2024 01:25 AM
ரூ.3.05 கோடியில் கால்நடை மருத்துவமனைகாணொலியில் திறந்து வைத்த முதல்வர்
ஓசூர், ஆக. 21-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பழைய பெங்களூரு சாலையில், மிகவும் பழமையான கட்டடத்தில், அரசு கால்நடை பன்முக மருத்துவமனை இயங்குகிறது. இதனால், 3.05 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதை, சென்னையில் இருந்தவாறு முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் நேற்று காலை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, சப் கலெக்டர் பிரியங்கா ஆகியோர் குத்துவிளக்கேற்றி, மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டனர். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன், ஓசூர் கால்நடை பன்முக மருத்துவமனை முதன்மை மருத்துவர் ரவிச்சந்திரன், ஓசூர் கோட்ட உதவி இயக்குனர் ஜோதிபாசு, கால்நடை உதவி மருத்துவர்கள் மோகன்ராஜ், அருணா, செந்தில், ஐஸ்வர்யா உட்பட பலர்
பங்கேற்றனர்.

