/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்
/
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்
ADDED : ஆக 29, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பாலக்கோடு சாலையில்சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சார் - பதிவாளர் கார்த்திகேயன் பல போலி பத்திர எழுத்தர்களை வைத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அதற்குலஞ்சம் பெற அலுவலர்கள் அல்லாத பலரை புரோக்கர்களாக வைத்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. அவர் தற்போது விடுப்பில் சென்றுள்ளார். எனினும் அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.