sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வைக்கோலுக்கு தீ வைப்பு சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது

/

வைக்கோலுக்கு தீ வைப்பு சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது

வைக்கோலுக்கு தீ வைப்பு சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது

வைக்கோலுக்கு தீ வைப்பு சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது


ADDED : மே 30, 2024 12:51 AM

Google News

ADDED : மே 30, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, சின்னபாரண்டபள்ளியை சேர்ந்தவர் சக்திவேல், 46; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், 46, என்பவருக்கும், கடந்த 10 ஆண்டுகளாக நிலத்தகராறில் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் காலை கோவிந்தராஜ், அவரின் மகன்கள் சாமுவேல், 24, இமானுவேல், 21, இவர்களின் நண்பர் பெரியகரடியூரை சேர்ந்த விஜி, 24, ஆகியோர், சக்திவேலின் வைக்கோல் போருக்கு தீ வைத்தனர். சக்திவேல் புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.

சாமுவேல் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் சக்திவேலின் வீட்டிற்கு கத்தியுடன் சென்று, அங்கு துாங்கி கொண்டிருந்த சக்திவேல் உறவினர் தசரதன், 45, என்பவரை, சக்திவேல் என நினைத்து கத்தியால் தாக்கினார். தசரதன் அலறியதால் அங்கிருந்து சாமுவேல் தலைமறைவானார். தசரதன் மனைவி புகார் படி, சாமுவேல் மீது கொலை முயற்சி வழக்கும், அதேபோல் சக்திவேல் புகார் படி, வைக்கோலுக்கு தீ வைத்ததாக சாமுவேல்,

இமானுவேல், விஜி ஆகியோரை கைது செய்த போலீசார், கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us