/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிரான்ஸ்பார்மர்களை உடைத்து ஆயில் திருடிய 4 பேர் கைது
/
டிரான்ஸ்பார்மர்களை உடைத்து ஆயில் திருடிய 4 பேர் கைது
டிரான்ஸ்பார்மர்களை உடைத்து ஆயில் திருடிய 4 பேர் கைது
டிரான்ஸ்பார்மர்களை உடைத்து ஆயில் திருடிய 4 பேர் கைது
ADDED : ஆக 02, 2024 03:39 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் கடந்த இரு மாதமாக டிரான்ஸ்பார்மர்-களை உடைத்து, காப்பர் காயில் மற்றும் ஆயிலை திருடும் சம்-பவம் தொடர்ந்து நடந்து வந்தது. திருட்டில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க, தேன்கனிக்கோட்டை போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த சுரேஷ், 36, முருகன், 41, ஆகியோர், டிரான்ஸ்பார்களை உடைத்து, காப்பர் காயிலை திருடி பழைய இரும்பு பொருட்கள் கடையில் விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், திருட்டு பொருட்களை வாங்கியதாக, ஓசூர் வெங்-கடேஷ் நகரை சேர்ந்த பழைய இரும்பு பொருட்கள் கடை உரி-மையாளர்கள் அருண்குமார், 38, அய்யாதுரை, 53, ஆகியோ-ரையும் கைது செய்தனர்.
மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
போச்சம்பள்ளி, ஆக. 1-
போச்சம்பள்ளியிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நேற்று மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணி போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை சென்று, மீண்டும் தாசில்தார் அலுவலகம் வந்த-டைந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாண-வியர், மஞ்சப்பை விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்-புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரன், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, கல்லுாரி நிர்-வாகி அரங்கநாதன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.