sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிராமத்தில் புகுந்த யானை தாக்கியதில் கன்று குட்டி பலி

/

கிராமத்தில் புகுந்த யானை தாக்கியதில் கன்று குட்டி பலி

கிராமத்தில் புகுந்த யானை தாக்கியதில் கன்று குட்டி பலி

கிராமத்தில் புகுந்த யானை தாக்கியதில் கன்று குட்டி பலி


ADDED : பிப் 24, 2025 02:31 AM

Google News

ADDED : பிப் 24, 2025 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஜவளகிரி வனச்சரக யானைகள், வனத்தை ஒட்டிய பகுதி தோட்டத்தில் புகுவது வாடிக்கை. நொகனுார் கிராமத்தில், ஒற்றை ஆண் யானை நேற்று காலை சுற்றித் திரிந்தது.

இதேபோல், தேன்கனிக்கோட்டை முள்பிளாட் வனத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை ஆண் யானை, உப்பராயனப்பள்ளி, நேரலட்டி வழியாக அகலக்கோட்டையை அடுத்த மல்லேஸ்வரா மலை பின்புறமுள்ள கூடன்ஏரி பகுதிக்கு, காலை 9:00 மணிக்கு வந்தது.

அங்கு விவசாய நிலத்தில் கட்டியிருந்த விவசாயி முத்தப்பா என்பவருக்கு சொந்தமான, எட்டு மாத பசு கன்றை தந்தத்தால் குத்திக் கொன்றது. தோட்டத்தில் மனைவியுடன் நின்றிருந்த முத்தப்பா, யானையை பார்த்து ஓட்டம் பிடித்தார்.

அதே தோட்டத்தில் பம்ப் செட் கொட்டகை கூரையை சேதப்படுத்திய யானை, ஜவளகிரி அருகே ஜல்லி மாரியம்மன் கோவிலை ஒட்டிய வனப்பகுதிக்குள் சென்றது. பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்த யானையால் மக்கள் பீதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us