sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

/

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்


ADDED : ஜூலை 26, 2024 03:35 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் வனப்பகுதிக்கு உட்பட்ட, சூளகிரி அடுத்த மேலுமலை வனப்பகுதியில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனப்பகுதியி-லிருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று சுற்றித்திரிகிறது.

அதை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்ட, ராயக்கோட்டை வனச்சரகத்தை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் முயன்று வருகின்றனர்.

நேற்று காலை சாமல்பள்ளம் அருகில் ஓட்டயனுாரில் சுற்றித்தி-ரிந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனக்காவலர் நரசிம்மன், 50, வனக்காப்பாளர் முருகேசன் ஆகி-யோரை யானை தாக்க முயன்றது. முருகேசன் தப்பிய நிலையில், நரசிம்மனை, யானை காலால் உதைத்து சென்றது.

இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட வனத்துறையினர், கிருஷ்-ணகிரி

அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட வன

அலுவலர் கார்த்திகேயினி மற்றும் வனத்துறையினர் விரைந்து, மக்களை அப்பகுதிக்கு வரவேண்டாம் என எச்சரித்தனர். தொடர்ந்து, ஒற்றை யானையை விரட்டும் பணியில்

ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us