sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? கிருஷ்ணகிரியில் பேசி முடித்த தி.மு.க., செயலர்

/

மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? கிருஷ்ணகிரியில் பேசி முடித்த தி.மு.க., செயலர்

மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? கிருஷ்ணகிரியில் பேசி முடித்த தி.மு.க., செயலர்

மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? கிருஷ்ணகிரியில் பேசி முடித்த தி.மு.க., செயலர்


ADDED : ஆக 02, 2024 11:23 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ஓசூர் மாநகர மேயருக்கு எதிராக போட்டி கூட்டம் நடத்திய, தி.மு.க., கவுன்சிலர்களை அழைத்து பேசிய மாவட்ட செயலர் பிரகாஷ் எம்.எல்.ஏ., அனைவரையும் சமாதானப்படுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர மேயராக, தி.மு.க.,வைச் சேர்ந்த சத்யா உள்ளார். இரண்டரை ஆண்டுகளாக தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணி பெரிய அளவில் நடக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், கவுன்சிலர்களை மதிப்பதில்லை.

அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மற்றும் பல்வேறு காரணங்களால், மக்களிடம் பதில் சொல்ல முடியாமல் தி.மு.க., கவுன்சிலர்கள் தடுமாறி வந்தனர். இதை மேயர் சத்யாவும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த, 31ல், மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் சத்யா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தை புறக்கணித்த, 14 தி.மு.க., கவுன்சிலர்கள், பா.ம.க., கவுன்சிலர் ஒருவர், மூன்று சுயேச்சைகள் என மொத்தம், 18 பேர், பாகலுார் சாலையில் உள்ள தனியார் ேஹாட்டலில், துணை மேயர் ஆனந்தய்யா தலைமையில் போட்டி கூட்டம் நடத்தினர்.

அக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்; புதிய கமிஷனர் பதவியேற்ற பின் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என தீர்மானித்து, அதை மனுவாக எழுதி, 18 கவுன்சிலர்களும் கையெழுத்திட்டு, மேயர் சத்யாவிடம் கொடுத்தனர்.

இதையறிந்த கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூரில் உள்ள மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்திற்கு நேற்று மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் கவுன்சிலர்களை வரவழைத்து பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினார். இதனால், மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட இருப்பதாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us