sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒற்றை யானையால் பயிர்கள் நாசம்

/

ஒற்றை யானையால் பயிர்கள் நாசம்

ஒற்றை யானையால் பயிர்கள் நாசம்

ஒற்றை யானையால் பயிர்கள் நாசம்


ADDED : ஆக 05, 2024 02:18 AM

Google News

ADDED : ஆக 05, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, ஓசூர் வனக்கோட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மேலுமலை வனப்பகுதியில், நீண்ட நாட்களாக ஒற்றை ஆண் யானை முகாமிட்டுள்ளது. கடந்த மாதம், 25ம் ‍தேதி யானையை விரட்ட முயற்சியில் வனத்துறையினர் ஈடுட்டபோது, சூளகிரி அடுத்த கும்மனுார் அருகே, வன காவலர் நரசிம்மன் மற்றும் மின்வாரிய லைன்மேன் மகேந்திரன் ஆகிய இருவர், யானை தாக்கி படுகாயமடைந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, குருபரப்பள்ளி அருகே மணியாண்டஹள்ளி, விநாயகபுரம், ராகிமானப்பள்ளி பகுதியில் சுற்றித்திரிந்தது. அங்கிருந்து போடரஹள்ளிக்கு சென்ற யானை, ஒரு ஏக்கர் நெல் தோட்டம் மற்றும் வாழை மரங்கள், கரும்பு தோட்டத்தை சேதப்படுத்தியது. பின்னர், மார்க்கண்டேய நதி மற்றும் தென்பெண்ணை ஆறு சந்திக்கும் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. அதை நேற்று மாலை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us