/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
லாரி மீது பைக் மோதல் நண்பர்கள் இருவர் பலி
/
லாரி மீது பைக் மோதல் நண்பர்கள் இருவர் பலி
ADDED : ஆக 16, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே பதிமடுகு கிராமத்தை சேர்ந்தவர் ரூபேஸ், 22, கட்டிக்கானப்பள்ளி, பாரதியார் நகரை சேர்ந்தவர் சூசைராஜ், 27, நண்பர்களான இருவரும் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.
பைக்கில், கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு கிருஷ்ணகிரி நமாஸ் பாறை மேம்பாலம் அருகே இருவரும் சென்றனர். அப்போது, முன்னால் சென்ற லாரியின் பின்னால் பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர்.
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.