sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பரோட்டாவிற்கு சாம்பார் கொடுத்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

/

பரோட்டாவிற்கு சாம்பார் கொடுத்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

பரோட்டாவிற்கு சாம்பார் கொடுத்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

பரோட்டாவிற்கு சாம்பார் கொடுத்ததால் தகராறு இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு


ADDED : மே 28, 2024 09:17 PM

Google News

ADDED : மே 28, 2024 09:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:பரோட்டாவிற்கு சாம்பார் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பை சேர்ந்த, 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி தேவசமுத்திரத்தை சேர்ந்தவர் வினீத், 26; இவர், ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலுள்ள ஒரு ஓட்டலில் சர்வராக பணியாற்றி வருகிறார். கடந்த, 26 ல் இவரது ஓட்டலுக்கு கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்த தமிழரசன், 29, பரோட்டா பார்சல் வாங்க வந்தார். அப்போது, வினீத் தவறுதலாக பரோட்டாவுக்கு குருமா கொடுப்பதற்கு பதில், சாம்பாரை கவரில் கட்டி கொடுத்து விட்டார். இதை தமிழரசன் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இரவு பணி முடிந்து வீடு திரும்பிய வினீத்துடன், அவரது நண்பர்கள் தேவசமுத்திரம் சுதர்சன், 22, பரத், 19, ஆகியோரும் சென்றனர். அவர்களை நமாஸ்பாறை மார்க்கெட் அருகே தமிழரசன் தரப்பினர், கைகளாலும், கட்டையாலும் தாக்கியதில் மூவரும் காயம‍டைந்தனர்.

வினித் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், தமிழரசன், 29, தமிழ்வாணன், 27, தங்கராஜ், 28, நதீம் அகமது, 25, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதே போல தமிழரசன் புகார் படி, வினித், 26, செந்தில், 47, செல்வராஜ், 35, பரத், 19, ஆகிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us