/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போலீசார், வருவாய் துறையினருடன் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆலோசனை
/
போலீசார், வருவாய் துறையினருடன் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆலோசனை
போலீசார், வருவாய் துறையினருடன் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆலோசனை
போலீசார், வருவாய் துறையினருடன் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆலோசனை
ADDED : ஜூலை 01, 2024 04:12 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், நீதித்துறை, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருடன், சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆலோசனை நடத்தினார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி சத்திய நாராயண பிரசாத், கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்து வரும் நீதிமன்ற புதிய கட்டட பணிகள், அடிப்படை தேவைகள் தொடர்பாக, மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய் பிரியா மற்றும் கலெக்டர் சரயு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நீதிமன்ற கட்டடங்களின் உள் கட்டமைப்பு வசதிகள், சூளகிரி, ஓசூரில் புதிய கட்டடங்களை கட்டுவதற்கான இடம் தேர்வு மற்றும் புதிய கட்டடங்களுக்கான கட்டுமான பணிகள், நீதிமன்ற வளாகங்களில் மின்வசதி, கழிப்பறை வசதி, சாய்வு தளம் உள்ளிட்ட பணிகள், மறு சீரமைப்பு மேற்கொள்வது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், புதிய கட்டட கட்டுமான பணிகளை விரைவாக துவங்க, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நீதிபதிகள் மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களோடு கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், எஸ்.பி., தங்கதுரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.