sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காவிரியாற்றில் நடுகல் கண்டெடுப்பு

/

காவிரியாற்றில் நடுகல் கண்டெடுப்பு

காவிரியாற்றில் நடுகல் கண்டெடுப்பு

காவிரியாற்றில் நடுகல் கண்டெடுப்பு


ADDED : மே 01, 2024 11:37 PM

Google News

ADDED : மே 01, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ், முதுகலை ஆசிரியர் முருகன், வரலாற்று ஆசிரியர் கதிர் மற்றும் ஆசிரியர்கள், மஞ்சுகொண்டப்பள்ளி பஞ்., உட்பட்ட கிராமங்களுக்கு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க சென்றிருந்தனர்.

அப்போது, தெப்பக்குழி காவிரியாறில் தண்ணீர் மிகவும் குறைவாக சென்றதால், ஒரு நடுகல்லை ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர். இந்த நடுக்கல் முதலையுடன் போராடி உயிர் நீத்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என தெரிய வந்தது.

இதுகுறித்து, ஓய்வுபெற்ற தர்மபுரி தொல்லியல் துறை இணை இயக்குனர் சுப்பிரமணியிடம் ஆசிரியர்கள் விளக்கம் கேட்டனர்.

அதற்கு, இத்தகைய முதலை குத்திப்பட்டான் நடுகல் தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்டதில்லை எனவும், இந்த நடுகல், 300 ஆண்டுகள் பழமையானது எனவும் அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us