ADDED : மார் 24, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், கட்சி மற்றும் அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், பகுதி நிர்வாகிகள் எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் இளங்கோவன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். மாவட்ட துணைச் செயலாளர் முருகன், ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, ஓசூர் தொகுதி பார்வையாளர் வேலுார் ரமேஷ், பகுதி செயலாளர்கள் திம்மராஜ், ஆனந்தய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

