ADDED : ஆக 27, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில், இ.கம்யூ., கட்சி பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ.,வுமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமையா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், பல ஆண்டுக-ளாக சாகுபடி செய்து வரும் நிலங்கள் மற்றும் வீடு கட்டி குடியி-ருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். சரணாலயம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்கும் வனத்து-றையை கண்டிப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி நிர்வாகிகளான பழனி, மாதேஷ், பிரபா ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.