ADDED : பிப் 23, 2025 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மீனாட்சி நகரை சேர்ந்தவர் தனசேகர், 41; ஓசூரில் பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இதில் பணியாற்றும் ஆறு தொழிலாளர்கள் நேற்று மதியம் உணவு சாப்பிட, தொழிற்சாலையை மூடிச் சென்றனர்.
மதியம், 3:00 மணிக்கு மின்கசிவால் தொழிற்சாலையில் தீப்பிடித்தது. ஓசூர் தீயணைப்புத்துறையினர், இரு வாகனங்களில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின.