sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2.52 லட்சம் மோசடி

/

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2.52 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2.52 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2.52 லட்சம் மோசடி


ADDED : மே 17, 2024 09:02 PM

Google News

ADDED : மே 17, 2024 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:ஓசூர் தனியார் நிறுவன ஊழியரிடம், முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக கூறி, 2.52 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பஸ்தி இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சதீஷ், 39, தனியார் நிறுவன ஊழியர். கடந்த பிப்.,15ல், இவரது மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதி நேர வேலை என்று கூறி, சில லிங்க்குகளை அனுப்பினர். அதை லைக் செய்த சதீஷூக்கு சிறதளவு பணம் கிடைத்தது. இதையடுத்து, முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும், உங்கள் பணம் இரட்டிப்பாகும் என கூறப்பட்டிருந்தது-.

இதை நம்பி சதீஷ், அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்குக்கு 2.52 லட்சம் ரூபாயை அனுப்பினார். ஆனால் சதீஷுக்கு எந்த தொகையும் வரவில்லை. இதனால் சநதேகமடைந்த சதீஷ், அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது-.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us