/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உணவில் விஷம் கலந்த கணவர் ; தப்பிய மனைவி போலீசில் புகார்
/
உணவில் விஷம் கலந்த கணவர் ; தப்பிய மனைவி போலீசில் புகார்
உணவில் விஷம் கலந்த கணவர் ; தப்பிய மனைவி போலீசில் புகார்
உணவில் விஷம் கலந்த கணவர் ; தப்பிய மனைவி போலீசில் புகார்
ADDED : ஆக 21, 2024 01:18 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பூதட்டிகோட்டையை சேர்ந்தவர் கரியப்பா, 36, கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி, 30, டெய்லர். இவர்களுக்கு, 16, 14 மற்றும் 12 வயதில் மகன்கள் உள்ளனர். மது அருந்தும் பழக்கமுள்ள கரியப்பா, 18ல் மது வாங்க பணம் கேட்டபோது, மனைவி தர மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த கரியப்பா, மனைவியை தாக்கி மிரட்டல் விடுத்தார். கடந்த, 18 இரவில், மகன்களுடன் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று, சாந்தி துாங்கினார். நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு தன் வீட்டிற்கு சென்ற சாந்தி, குழந்தைகளுக்கு உணவு சமைத்து வைத்து விட்டு வெளியே சென்றார்.
அந்த நேரத்தில் கரியப்பா வீட்டில் இருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து, குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சாந்தி அழைத்தார். அப்போது உணவிலிருந்து, களைக்கொல்லி மருந்து வாசனை வந்தது. சந்தேகமடைந்த சாந்தி, மகன்களுக்கு உணவு கொடுக்காமல், தானும் உண்ணாமல் தவிர்த்தார். தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். உணவை பறிமுதல் செய்து, அதை தர்மபுரி அரசு மருத்துவமனை ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடி தலைமறைவாக இருந்த கரியப்பாவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

