sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கன அடியாக அதிகரிப்பு

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கன அடியாக அதிகரிப்பு


ADDED : மே 11, 2024 07:09 AM

Google News

ADDED : மே 11, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக, ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு, 800 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இன்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த இரண்டு மாதமாக நீர்வரத்து வினாடிக்கு, 200 கன அடியாக சரிந்துள்ளது. இதனால், அங்குள்ள ஐவர்பாணி, அதன் கிளை ஆறுகள், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் முற்றிலுமாக நீரின்றி, வறண்டு காணப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாறு ஆங்காங்கே குட்டைப்போல் காட்சி அளித்தது.

இந்நிலையில். கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 200 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 800 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது. இதனால் வறண்டு கிடந்த அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us