/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய கடன் வழங்கும் முறை அறிமுகம்
/
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய கடன் வழங்கும் முறை அறிமுகம்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய கடன் வழங்கும் முறை அறிமுகம்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய கடன் வழங்கும் முறை அறிமுகம்
ADDED : ஜூலை 03, 2024 07:50 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள
அறிக்கை:
தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், கடந்த, 3 ஆண்டுகளுக்கு மேல் பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் ஒன்றியங்களில் உள்ள, 102 ஊராட்சி-களில் செயல்பட்டு வருகிறது. இதில் ஊரக தொழில் முனை-வோர்களுக்கு இணை மானிய நிதி திட்டத்தில், 30 சதவீதம் மானிய வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருதிறது.
இத்திட்டத்தில் தற்போது சிறிய மாற்றம் செய்து, புதிய கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி திட்டம் செயல்படும், 102 ஊராட்சிகளில் புதிய மற்றும் பழைய தொழில் செய்யும் தொழில் முனைவோர், இதுவரை எந்த வங்கி-களிலோ அல்லது இதர பிற நிதி நிறுவனங்களிலோ தொழில்-கடன் பெறாமல் இருக்கும் பட்சத்தில், அவர்களை கண்டறிந்து தொழில் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 21 - 45 வய-திற்குள் உள்ள சுய உதவி குழு உறுப்பினர்கள் அல்லது குடும்ப அட்டையிலுள்ள யாராவது ஒருவர் சுய உதவி குழுவில்
இருந்து, தொழில் முனைவோராக விரும்பினால், சிபில் மதிப்-பீடு, பயனாளி பங்குத்தொகை போன்ற விதிகளுக்கு உட்பட்டு கடனுதவி செய்யப்படும். இந்த விதிகளின்படி கடன் பெற விரும்-புவோர், பர்கூர் - 81242 11771, கிருஷ்ணகிரி - 96777 85793, காவேரிப்பட்டணம் - 98942 84904 ஆகிய எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.