sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,872 வழக்குகளில் ரூ.14.25 கோடிக்கு தீர்வு

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,872 வழக்குகளில் ரூ.14.25 கோடிக்கு தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,872 வழக்குகளில் ரூ.14.25 கோடிக்கு தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,872 வழக்குகளில் ரூ.14.25 கோடிக்கு தீர்வு


ADDED : செப் 15, 2024 02:07 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த, லோக் அதாலத் எனப்-படும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1,872 வழக்குகளில், 14.25 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய்பிரியா தலைமை வகித்து பேசியதாவது:நடப்பாண்டில், மூன்றாவது நாடு தழுவிய தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் எனும் லோக் அதாலத் நடத்தப்படுகிறது. இதில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூர், தேன்க-னிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்கு, குடும்பநல வழக்கு, வங்கி கடன் வழக்கு, காசோலை வழக்கு, நிதி நிறுவன வழக்கு, பாகப்-பிரிவினை வழக்கு மற்றும் முன் வழக்குகள் ஆகியவை விசார-ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில், 1,872 வழக்குகளில், 14 கோடியே, 25 லட்சத்து, 63 ஆயிரத்து, 188 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நப-ருக்கு அதிகபட்சமாக, 27.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் பல தீர்வாகாத வழக்குகள் இன்று தீர்த்து வைக்கப்பட்-டுள்ளன. எனவே நீதிமன்றங்களில் நடக்கும் லோக்அதாலத்தில் வழக்காடிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.

குடும்ப நல நீதிபதி நாகராஜன், மோட்டார் வாகன பிரிவு சிறப்பு நீதிபதி அமுதா, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுதா, முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், கூடுதல் சார்பு நீதிபதி ஜெனிபர், மாவட்ட உரிமையியல் நீதிபதி யுவராஜ், கூடுதல் மகளிர் நீதிமன்ற நடுவர் இருதயமேரி, நீதித்துறை எண்.1 நடுவர் கார்த்திக் ஆசாத், எண்.2 நடுவர், ஸ்ரீவஸ்தவா, வழக்கறிஞர் சங்க நிர்வாகி

கள் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் உள்ளிட்ட பலர்

கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us