sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மக்னா யானை சிக்கியது 8 கும்கிகள் உதவியுடன் பிடிப்பு

/

மக்னா யானை சிக்கியது 8 கும்கிகள் உதவியுடன் பிடிப்பு

மக்னா யானை சிக்கியது 8 கும்கிகள் உதவியுடன் பிடிப்பு

மக்னா யானை சிக்கியது 8 கும்கிகள் உதவியுடன் பிடிப்பு


ADDED : ஜூலை 31, 2024 12:58 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் அருகே, பன்னார்கட்டா தேசிய பூங்கா உள்ளது. இதையொட்டிய கிராம பகுதிகளில், தந்தம் இல்லாத ஆண் யானையான மக்னா யானை ஒன்று நீண்ட நாட்களாக சுற்றித் திரிந்தது. அப்பகுதி விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்து வந்த யானை, இதுவரை மூன்று பேரை தாக்கி கொன்றது. இதனால் அதை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, அந்த மக்னா யானையை பிடிக்க, கர்நாடகா மாநிலத்தின் துபாரே மற்றும் மத்திகோடு முகாம்களில் இருந்து, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மக்னா யானையை, கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன், 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் தேடி கண்டுபிடித்தனர்.

மயக்க மருந்து நிபுணர் ரஞ்சன், மக்னா யானை மீது துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தினார். 1 கி.மீ., துாரம் சென்ற யானை, மயங்கமடைந்து சாய்ந்தது. தடிமனான கயிறுகளை வைத்து யானையை கட்டி, பீமா, மகேந்திரா ஆகிய கும்கி யானைகள் உதவியுடன், லாரியில் ஏற்றி, பன்னார்கட்டா தேசிய பூங்காவின் சீகேகட்டே யானைகள் முகாமிற்கு வனத்துறையினர் அனுப்பினர்.

இதனால், பன்னார்கட்டா தேசிய பூங்காவை ஒட்டிய கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us