sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மத்திகிரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்

/

மத்திகிரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்

மத்திகிரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்

மத்திகிரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்


ADDED : ஏப் 25, 2024 04:49 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: மத்திகிரி மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில், 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மற்றும் பல்லக்கு உற்சவம் கடந்த, 22 ல் துவங்கியது. நேற்று முன்தினம் கூட்டுவை நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று மதியம் துவங்கியது.

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, அலங்கரித்த தேரில் உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து, மிடுகரப்பள்ளியில் இருந்து, மத்திகிரி மாரியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர். ஓசூர், மிடுகரப்பள்ளி, மத்திகிரி பகுதி பக்தர்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களும், அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று (ஏப்.25) தின்னுார் பகுதி மக்களால் காலை, 10:00 மணிக்கு, அலகு குத்தும் நிகழ்ச்சி, மதியம், 2:45 மணிக்கு அம்மன் உற்சவம், மிடுகரப்பள்ளி கிராம மக்கள் சார்பில் மதியம், 3:00 மணிக்கு சிடி உற்சவம், நவதி மக்களால் மாலை, 6:00 மணிக்கு சிம்ம வாகன உற்சவம் நடக்கிறது. நாளை (ஏப்.26) கோட்டை மாரியம்மன் பல்லக்கு உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us