sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நா.த.க., முன்னாள் நிர்வாகி கிருஷ்ணகிரி வழக்கில் கைது

/

நா.த.க., முன்னாள் நிர்வாகி கிருஷ்ணகிரி வழக்கில் கைது

நா.த.க., முன்னாள் நிர்வாகி கிருஷ்ணகிரி வழக்கில் கைது

நா.த.க., முன்னாள் நிர்வாகி கிருஷ்ணகிரி வழக்கில் கைது


ADDED : செப் 08, 2024 02:31 AM

Google News

ADDED : செப் 08, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி., முகாமில், பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகியுமான சிவராமனால் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

இதில், சிவராமன் உட்பட 13 பேரை, பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைதுக்கு முன் விஷம் குடித்த சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தமிழக அரசு இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு, பல்நோக்கு குழுக்களை அமைத்து விசாரித்து வருகிறது. இதில், மேலும் ஒரு பள்ளியில் முகாம் நடத்தியது தொடர்பாக அப்பள்ளி பெண் முதல்வர் கைதானார். என்.சி.சி., போலி முகாமை மறைக்க முயன்ற, காவேரிப் பட்டணம் அரசு பள்ளி என்.சி.சி., ஆசிரியர் கோபு, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதனால் கைது எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்தது.

கந்திகுப்பம் தனியார் பள்ளியில் நடந்த முகாம் குறித்த விபரங்கள், அப்பள்ளி கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்கில் இருந்துள்ளது. இது போலீசார் கையில் சிக்கினால், மேலும் பலர் சிக்கக்கூடும் என நினைத்த சிவராமன், கைதாவதற்கு முன், தன் நண்பரும், நா.த.க., கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவருமான கருணாகரன், 32, என்பவரிடம் கூறியுள்ளார்.

பள்ளிக்கு சென்ற கருணாகரன், ஹார்டு டிஸ்க்கை எடுத்து எரித்தது, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து கருணாகரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us