ADDED : ஆக 30, 2024 04:36 AM
கிருஷ்ணகிரி: ஓசூர் ஊராட்சி ஒன்றியம், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்-ளியில், 85 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், எம்.எஸ். தோனி குளோபல் பள்ளி சார்பில், 30 லட்சம் மதிப்பில், 2 வகுப்பறை கொண்ட கட்டடம் மற்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, 2 கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட-வற்றை, அமைச்சர் சக்கரபாணி நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா உடனிருந்தனர்.அதேபோல, சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஆலுாரில், 47.45 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட பஞ்., அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்து, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 7 நட-மாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை வழங்கினார்.