sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு நிலத்தில் தனியார் சாலை பொக்லைனை சிறைபிடித்த மக்கள்

/

அரசு நிலத்தில் தனியார் சாலை பொக்லைனை சிறைபிடித்த மக்கள்

அரசு நிலத்தில் தனியார் சாலை பொக்லைனை சிறைபிடித்த மக்கள்

அரசு நிலத்தில் தனியார் சாலை பொக்லைனை சிறைபிடித்த மக்கள்


ADDED : ஆக 07, 2024 01:23 AM

Google News

ADDED : ஆக 07, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், அங்கொண்டப்பள்ளி கிராமம் அருகே, தனிநபர்கள் நிலம் வாங்கி லே - அவுட் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, சாலை வசதி இல்லாததால், லே - அவுட்டுகளை விற்பனை செய்ய முடியாது என, அப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலம் மற்றும் 4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, அங்கிருந்த மரங்களை வெட்டி நிலத்தை சமன் செய்து, சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரவில் 'பொக்லைன்' கொண்டு சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது.

இதுகுறித்து, வருவாய்த்துறையிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அங்கொண்டப்பள்ளி கிராம மக்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மூன்று பொக்லைனை சிறைபிடித்தனர். சூளகிரி தாசில்தார் சக்திவேல் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். தாசில்தார் சக்திவேல், மூன்று பொக்லைனை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us