sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்

/

வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்

வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்

வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி சொந்த கட்டடம் கேட்டு மறியல்


ADDED : ஆக 07, 2024 08:57 AM

Google News

ADDED : ஆக 07, 2024 08:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கிரியானப்பள்ளியில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 75 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன், பள்ளியின் ஓடு கட்டடம் சேதமானது.

மேலும், சுவர் இடிந்ததால் கழிப்பறையையும் பயன்படுத்த முடியாமல் மாணவியர் அவதி அடைந்தனர். இதனால், கடந்த இரு ஆண்டுகளாக அப்பகுதியிலுள்ள வீடுகளின் வராண்டாக்களில் மாணவ - மாணவியருக்கு பாடம் நடத்தப்படுகிறது.

பள்ளிக்கு சொந்த கட்டடம் கேட்டு பெற்றோர் கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால் நேற்று காலை, 10:00 மணிக்கு மாணவ - மாணவியர், 50க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து மறியல் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர், டி.எஸ்.பி., சாந்தி பேச்சு நடத்தி, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மறியலை கைவிட்டு, காலை, 11:30 மணிக்கு பின் மாணவ - மாணவியர் பள்ளிக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us