/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்மாற்றியில் தீயால் மின்சாரம் துண்டிப்பு
/
மின்மாற்றியில் தீயால் மின்சாரம் துண்டிப்பு
ADDED : மே 27, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், அரிசிபாளையம் பிரதான சாலையில் உள்ள மின்மாற்றியில் நேற்று இரவு, 7:00 மணிக்கு மின்கசிவால் தீப்பற்றி எரிந்தது.
மக்கள் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், 10 நிமிடத்தில் வந்து உடனே தீயை அணைத்தனர். இந்த விபத்தால், 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

