/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
/
ஓசூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஆக 30, 2024 04:32 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள், இளம் பெண்கள் பயனடையும் வகையில், மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் ஆகியவை சார்பில், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை, 31 காலை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
5ம் வகுப்பு முதல் பிளஸ், 2 வரை படித்தவர்கள் மற்றும் டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள், இளம் பெண்கள் முகாமில் பங்-கேற்கலாம். தங்களது சுய விபர அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்று, ஆதார் கார்டு ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 82203 80619, 96778 92206, 73731 03556, 04343 235267 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

