/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பல மாதங்களுக்கு பின் கிருஷ்ணகிரியில் மழை
/
பல மாதங்களுக்கு பின் கிருஷ்ணகிரியில் மழை
ADDED : மே 07, 2024 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கடந்த, 2 நாட்களாக மாலையில் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர். மழையில்லாமல், காலை முதல் இரவு வரை கடும் வெப்பக்காற்று வீசி வரும் நிலையில், பலர் துாக்கமின்றி தவிக்கின்றனர்.
நேற்றிரவு, 8:25 மணிக்கு கிருஷ்ணகிரியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பிறகு, கிருஷ்ணகிரியில் மழை பெய்து குளிர் காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.