/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிராபிக் வார்டன்களுக்கு ஊதியம் ஓசூரில் தனியார் அமைப்பு ஏற்றது
/
டிராபிக் வார்டன்களுக்கு ஊதியம் ஓசூரில் தனியார் அமைப்பு ஏற்றது
டிராபிக் வார்டன்களுக்கு ஊதியம் ஓசூரில் தனியார் அமைப்பு ஏற்றது
டிராபிக் வார்டன்களுக்கு ஊதியம் ஓசூரில் தனியார் அமைப்பு ஏற்றது
ADDED : ஆக 11, 2024 03:32 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் போக்குவரத்து நெரிசலை சீர-மைக்க, 79 டிராபிக் வார்டன்கள் நியமிக்கப்பட்டு காலை, மாலை நேரங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 13 பேருக்கு ஓசூர் இண்டஸ்டிரியல் அசோசியேஷன் மாத ஊதியம் வழங்குகி-றது. மீதமுள்ள, 66 பேர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு, விருப்பத்தின் பேரில் ஊதியமின்றி பணியாற்று
கின்றனர். இந்நிலையில், போலீசார் மூலம் மேலும், 10 டிராபிக் வார்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாத ஊதிய-மாக, 15,000 ரூபாயை, ஓசூர் கிரஷர் ஓனர் பெடரேசன் வழங்கு-தாக கூறியுள்ளது. முதற்கட்டமாக, எட்டு டிராபிக் வார்டன்கள் போலீசார் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்க-ளுக்கு முதல் மாத ஊதியத்திற்கான காசோலையை, ஓசூர் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்த, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை-யிடம், ஓசூர் கிரசர் ஓனர் பெடரேஷன் தலைவர் சம்பங்கி, செய-லாளர் பிரேம்நாதன், துணைத்தலைவர் மது, பொருளாளர் ஆனந்த்குமார் ஆகியோர் நேற்று வழங்கினர். ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் உடன் இருந்தார்.

