sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கண்காணிப்பை தீவிரமாக்க எஸ்.பி., உத்தரவு

/

கண்காணிப்பை தீவிரமாக்க எஸ்.பி., உத்தரவு

கண்காணிப்பை தீவிரமாக்க எஸ்.பி., உத்தரவு

கண்காணிப்பை தீவிரமாக்க எஸ்.பி., உத்தரவு


ADDED : செப் 01, 2024 05:03 AM

Google News

ADDED : செப் 01, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லை-களில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதை தடுக்க, கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று, கோவை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., பாலாஜி சரவணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்தார். நிலுவை வழக்குகள், ரேஷன் பொருட்கள் கடத்-தலில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள், அதன் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். கைப்பற்றப்பட்ட வாக-னங்களை விரைந்து ஏலத்தில் விட அறிவுறுத்தினார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையோர கர்நாடக, ஆந்திர எல்லைப்-பகுதிகளை ஒட்டிய, குருவிநாயனப்பள்ளி, வேப்பனஹள்ளி சோதனைச்சாவடிகளிலும் ஆய்வு செய்து, கண்காணிப்பை தீவரப்படுத்த கூறினார். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்துபவர்களுக்கு எங்கிருந்து ரேஷன் அரிசி கிடைக்கிறது. ரேஷன் கடை விற்பனை-யாளர்களுக்கும் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா, ரேஷன் அரி-சியை எந்தெந்த பகுதிகளில் பதுக்குகிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., பெரியசாமி மற்றும் உண-வுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us