sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பலி

/

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பலி

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பலி

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பலி


ADDED : ஏப் 23, 2024 11:30 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி சிப்பாய்பாளையத்தை சேர்ந்தவர் சையத்வாசிம் மனைவி பர்ஷானா தாஜ், 30; இவர் மகள் அபியா, 7; அப்பகுதியிலுள்ள அரசு உருது பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வந்தார். கணவர் இறந்த நிலையில், மகள் அபியாவை தாய் பர்ஷானா தாஜ் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் தண்டரை ஏரிக்கு, பக்கத்து வீட்டை சேர்ந்த குடும்பத்தினர் குளிக்கச் சென்றனர். அபியாவும் அவர்களுடன் சென்றார்.

ஏரியில் குளித்து விட்டு மதிய உணவு சாப்பிட்ட பின், இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி, மாணவி அபியா சென்றார். நீண்ட நேரமாக அவர் திரும்பாததால், ஏரியில் தேடியபோது அங்கு சடலமாக மிதந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணையில், கால் கழுவ சென்ற போது, அபியா ஏரியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us