/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்ராவன 4வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு
/
ஸ்ராவன 4வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு
ஸ்ராவன 4வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு
ஸ்ராவன 4வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு
ADDED : செப் 01, 2024 04:57 AM
ஓசூர்: ஓசூரில், ஸ்ராவன, 4வது சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
சூளகிரி அடுத்த கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்-வர சுவாமி கோவிலில், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் புரட்டாசியான ஸ்ராவன மாத, 4வது சனிக்கிழமையையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சுவா-மிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. கருட கம்-பத்தின் முன் தேங்காய் உடைத்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரதநாட்டியம், ஹரிகதை, கர்நாடக இசை, கோலா ட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல், ஓசூர் வெங்கடேஷ் நகர் மலை மீதுள்ள வெங்கடர-மண சுவாமி கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். அதேபோல், பஸ்தலப்பள்ளி திம்மராய சுவாமி கோவிலில், காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநில
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.