/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம்; சீமான்
/
என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம்; சீமான்
என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம்; சீமான்
என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம்; சீமான்
ADDED : ஆக 10, 2024 07:25 AM
அரூர்: ''என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்பு-தல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது,'' என, நாம் தமிழ் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
உலக பழங்குடியினர் நாளை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடி-யினர் பாதுகாப்பு பாசறை சார்பில், நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
பள்ளி வகுப்பறை கட்டடங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை. இந்நி-லையில் பார்முலா, 4 கார்பந்தயம் விளையாட்டு தேவைதானா, கல்லுாரிக்கு செல்லும் பெண்களை குறி வைத்து, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
என் பின்னால் இளம் பெண்கள், இளைஞர்கள் ஆயிரக்க-ணக்கில் திரள்கிறார்கள். நான் என்ன பேசுகிறேன் என்பதை கேட்-பதற்காக கூடுகிறார்கள். என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில், ஒரு ரூபாய் கொடுக்காமல், 36 லட்சம் ஓட்-டுக்களை நாம்தமிழர் கட்சி பெற்றுள்ளது. இவ்வாறு அவர்
பேசினார்.

