sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நன்றி தெரிவித்த தி.மு.க.,- எம்.பி., வேலை கேட்ட பெண் தொழிலாளர்கள்

/

நன்றி தெரிவித்த தி.மு.க.,- எம்.பி., வேலை கேட்ட பெண் தொழிலாளர்கள்

நன்றி தெரிவித்த தி.மு.க.,- எம்.பி., வேலை கேட்ட பெண் தொழிலாளர்கள்

நன்றி தெரிவித்த தி.மு.க.,- எம்.பி., வேலை கேட்ட பெண் தொழிலாளர்கள்


ADDED : ஆக 23, 2024 02:03 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., - எம்.பி., மணி, நேற்று கடத்துார் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம், நொச்சிக்குட்டை, அம்பாலப்பட்டி, தாதனுார், புதுார், ராமியணஹள்ளி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக தாளநத்தம் கிராமத்திற்கு காலை, 11:30 மணிக்கு வந்த எம்.பி., மணி பொதுநுாலகம் அருகில் பேசிவிட்டு வந்தபோது அவரை, 20க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது, முன்பு எம்.பி.,யாக இருந்த செந்தில்குமார் தங்கள் கிராமத்திற்கு எதுவும் செய்யவில்லை, 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு, பணி வழங்குவதில்லை என புகார் கூறியதுடன், தங்கள் கிராமத்திற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே மேம்பாலம், சின்டெக்ஸ் தொட்டி, நுாலக வசதி உள்ளிட்டவைகளை செய்து கொடுக்க, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மொபைல்போனில் பி.டி.ஓ.,விடம் பேசிய, எம்.பி., மணி, பெண்களுக்கு,

100 நாள் திட்டத்தில் பணி வழங்க கேட்டுக்கொண்டார்.

மேலும், ரயில்வே மேம்பாலத்திற்கு, மத்திய அமைச்சரிடமும், சுகாதார நிலையம் அமைக்க, மாநில அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது தான், நான் வந்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் என்னிடம் கோரிக்கை மனு கொடுங்கள், அதனை பரிசீலித்து செய்து தருகிறேன். இந்த, பஞ்.,ல் தான் எனக்கு அதிகமான ஓட்டுக்கள் கிடைத்தது. அதனால், இப்பகுதி மக்களின் நன்றியை மறக்க மாட்டேன் என பேசினார். இதையடுத்து, 12:00 மணிக்கு முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

எம்.பி.,யுடன் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us