/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது
/
வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது
ADDED : மே 30, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜான்பாஷா, 55.
பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்கிறார்; இவர் கடந்த, 27 இரவு, 9:00 மணிக்கு, தாவரக்கரை அருகே மலை அடிவாரத்தில் பணம் வைத்து சூதாடினார். வெற்றி பெற்ற பணத்துடன் அங்கிருந்து புறப்பட்ட போது, சூதாட்டத்தை நடத்திய தொட்டேகானப்பள்ளியை சேர்ந்த ராமகிருஷ்ணன், 30, என்பவர், ஜான்பாஷாவை தகாத வார்த்தையால் திட்டி, அவரிடமிருந்த, 1,500 ரூபாயை பறித்து கொண்டார். இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். கெலமங்கலம் போலீசில் ஜான்பாஷா கொடுத்த புகார்படி, ராமகிருஷ்ணனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.