ADDED : செப் 15, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே, கீரனப்பள்ளியில் உள்ள மாரியம்மன் கோவிலில், சுவாமி கழுத்தில் கிடந்த அரை பவுன் தாலியை, வாலிபர் ஒருவர் நேற்று அதிகாலை திருடினார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள், வாலிபரை பிடித்து உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், உத்தனப்பள்ளி அருகே தேவசா-னப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன், 38, என்பதும், இவர் மீது இரு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அரை பவுன் தாலியை பறிமுதல் செய்தனர்.