sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டீக்கடைக்காரர்களை தாக்கிய வி.சி.,க்கள் கைது

/

டீக்கடைக்காரர்களை தாக்கிய வி.சி.,க்கள் கைது

டீக்கடைக்காரர்களை தாக்கிய வி.சி.,க்கள் கைது

டீக்கடைக்காரர்களை தாக்கிய வி.சி.,க்கள் கைது


ADDED : ஆக 15, 2024 01:02 AM

Google News

ADDED : ஆக 15, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மாபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நிர்மல், 27 மற்றும் விக்னேஷ், 30. காவேரிப்பட்டணம், தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டீக்கடை நடத்துகின்றனர். நேற்று அதிகாலை 1:00 மணிக்கு குடிபோதையில் சிலர் டூ-வீலர்களில் வந்து, பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சிகரெட் வாங்கினர். அங்கிருந்து செல்ல முயன்றவர்களிடம், டீக்கடையில் இருந்த நிர்மல், பணம் கேட்டார்.

மதுபோதையில் இருந்த அவர்கள், 'எங்களிடமே காசு கேட்கிறாயா, நாங்கள் யாரென்று தெரியுமா' எனக்கேட்டு நிர்மல், விக்னேஷை சரமாரியாக தாக்கினர். டீக்கடையில் இருந்த பாட்டில்களையும் உடைத்து சேதப்படுத்தினர்.

படுகாயமடைந்த சகோதரர்கள் இருவரும், காவேரிப்பட்டணம் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், அவர்களை தாக்கியது வி.சி., கட்சியினர் என தெரிந்தது. இதையடுத்து, காவேரிப்பட்டணம் காந்தி நகர் விஷ்வா, 20, மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து, மேலும் சிலரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us