/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி துவக்கம்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி துவக்கம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி துவக்கம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 30, 2024 03:11 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைகளை வழங்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று துவக்கி வைத்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 1,736 பள்ளிகளில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 1,16,155 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட உள்ளது,'' என்றார்.
தொடர்ந்து கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்-ளியில் செயல்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆயத்த பயிற்சி மையத்தில் பயின்று, மாநில நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்-கினார்.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், சி.இ.ஓ., மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயந்தி கட்டிகானப்பள்ளி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.