/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
/
காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED : ஆக 27, 2024 02:26 AM
கிருஷ்ணகிரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடி-யிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று, தேய்பிறை அஷ்டமி-யையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவம், பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்-கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிரா-மங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையிலுள்ள தட்சிண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்-டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

