/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இடுபொருள் தயாரித்தல் விவசாயிகளுக்கு பயிற்சி
/
இடுபொருள் தயாரித்தல் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 30, 2024 03:11 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மெணசியில், பாப்பிரெட்டிப்-பட்டி வேளாண் துறை சார்பில், அட்மா திட்டத்தில் அங்கக இடு-பொருட்கள் தயாரிப்பு குறித்த, உள் மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி, வேளாண் உதவி இயக்குனர் அருணன் தலை-மையில் நடந்தது.
இதில், தர்மபுரி உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண் அலு-வலர் தமிழிசை, இயற்கை விவசாயி சாமிக்கண்ணு, உதவி வேளாண் அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார தொழில்நுட்ப உதவி மேலாளர் சண்முகம், திருப்பதி உள்ளிட்டோர் பேசினர்.
பயிற்சியில் இயற்கை இடுபொருட்களை தங்கள் விவசாய நிலத்தி-லேயே தயார் செய்து பயன்படுத்தி, மண் வளத்தை பாதுகாக்கு-மாறு விவசாயிகளை கேட்டுக்கொள்ள பட்டது.

