/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ADDED : ஏப் 07, 2024 03:26 AM
அரூர்: அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான ஓட்டுச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பையர்நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள பதற்றமான, 4 ஓட்டுச்சாவடிகளை தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, செங்கலேரியில் பழங்குடியின மக்களுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ஓட்டுச்சாவடி மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல், ஜக்குப்பட்டியில் பதற்றமான, 3 ஓட்டுச்சாவடிகள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொல்லப்பட்டி ஓட்டுச்சாவடி மற்றும் நவலையில் அமைந்துள்ள, 2 ஓட்டுச்சாவடி மையங்களையும் ஆய்வு செய்தார். அரூர்
ஆர்.டி.ஓ., உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் ராஜசேகர் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

